search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தனியார் பள்ளிகள்"

    • தமிழகம் முழுவதும் இன்று 987 தனியார் பள்ளிகள் செயல்படவில்லை என தகவல்.
    • பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன், தனியார் பள்ளி சங்கங்கள் பேச்சுவார்த்தை.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தை அடுத்து நிகழ்ந்த கலவரத்தில் சம்பந்தப்பட்ட பள்ளி சூறைப்பட்டப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் இன்று தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க பொதுச் செயலாளர் நந்தகுமார் நேற்று தெரிவித்திருந்தார்.

    ஆனால் தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தமிழக அரசு எச்சரித்திருந்தது.

    இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 91 சதவீத தனியார் பள்ளிகள் இயங்கின. எனினும் தேனி, ஆண்டிப்பட்டி, வருசநாடு, கண்டமனூர், உத்தமபாளையம், சின்னமனூர், பெரியகுளம், போடி ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகள் அடைக்கப்பட்டன.

    மொத்தம் 987 பள்ளிகள் இன்று செயல்படவில்லை என தகவல்கள் வெளியாகின. அவற்றின் மீது பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில், கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை இன்று பார்வையிட்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன்,  பல்வேறு தனியார் பள்ளி சங்கங்களின் நிர்வாகிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதில் முடிவு எட்டப்பட்டுள்ளதாக நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச்செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாகவும், நாளை முழுவதும் வழக்கம் போல் தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

    • தமிழக அரசு எச்சரிக்கை எதிரொலி காரணமாக மதுரையில் தனியார் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கின.
    • கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

    மதுரை

    விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கூடத்தில், மாணவி ஒருவர் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக உறவினர்கள் நீதி கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட பள்ளிகூடம் முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது. இது ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில் 'கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் செயல்படாது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தமிழக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்கத்தின் அறிவிப்புக்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 'தமிழகத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்' என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    இருந்தபோதிலும் தமிழகத்தில் இயங்கி வரும் பல்வேறு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள் இன்று மூடப்பட்டன.

    மதுரை மாவட்டத்தில் 300 தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் எதிரொலியாக மதுரை மாவட்டத்திலும் தனியார் பள்ளிகள் மூடப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரையில் இயங்கி வரும் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்கள், இன்று வழக்கம் போல திறந்து இருந்தன. எனவே மாணவ- மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றனர்.

    இது தொடர்பாக மதுரை மாவட்ட மெட்ரிகுலேஷன் தனியார் மேல்நிலைப்பள்ளி சங்க நிர்வாகிகள் கூறும் போது, 'மதுரை மாவட்டத்தில் மெட்ரிகுலேஷன் பள்ளிக்கூடங்களை மூடக்கூடாது என்று முடிவெடுக்கப்பட்டு உள்ளது.

    கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் தொடர்பாக அரசு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது' என்று தெரிவித்தனர்.

    இதற்கிடையே ஏராளமான வக்கீல்கள், இன்று மதுரை உயர்நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு திரண்டு வந்தனர். அப்போது பலியான கள்ளக்குறிச்சி மாணவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து வக்கீல்கள், 'தனியார் கல்வி நிலையங்களில் குழந்தைகளுக்கு முழு பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், தனியார் பள்ளிகளின் பள்ளிமூடல் மிரட்டலை தடுத்து நிறுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 346 மெட்ரிக் பள்ளிகளும், 148 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது.
    • இன்று பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 6 மெட்ரிக் பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    செங்கல்பட்டு:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி விடுதியில் மர்மமாக இறந்தார். இந்த விவகாரம் தொடர்பாக நேற்று காலை பள்ளி முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது கலவரமாக மாறியது.

    ஏராளமானோர் பள்ளிக்குள் புகுந்து பஸ்களுக்கு தீவைத்தனர். மேலும் பள்ளியில் இருந்த பொருட்கள் அனைத்தையும் நொறுக்கி சூறையாடினர்.

    இதனை கண்டித்து தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர்ந்து தனியார் பள்ளிகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    இதனால் இன்று காலை தனியார் பள்ளிகள் செயல்படுமா? அல்லது மூடப்ப டுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் நிலவியது.

    இந்த நிலையில் அரசின் எச்சரிக்கையை மீறி திருவள்ளூர் மாவட்டத்தில் 7 தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, ஆவடி, அம்பத்தூர், திருவள்ளூர், பொன்னேரி ஆகிய கல்வி மாவட்டத்தில் 346 மெட்ரிக் பள்ளிகளும், 148 சி.பி.எஸ்.இ. பள்ளிகளும் உள்ளது.

    இன்று பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 6 மெட்ரிக் பள்ளிகளும், அம்பத்தூர் கல்வி மாவட்டத்தில் ஒரு மெட்ரிக் பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    விடுமுறை அளித்துள்ள தனியார் பள்ளி நிர்வாகத்தினர் விளக்கம் அளிக்க திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமன் உத்தரவிட்டு உள்ளார்.

    செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் மொத்தம் 1,702 பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் 860, 842 தனியார் பள்ளிகள் என அனைத்தும் வழக்கம் போல் செயல்பட்டன.

    தனியார் பள்ளிகள் இயங்குவதை கண்காணித்து வருவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தெரிவித்து உள்ளார்.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் இயங்கியது.

    • தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது சட்டத்தை மீறும் செயல்.
    • மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாளை முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளதாகவும், இதனால் தனியார் பள்ளிகள் இயங்காது என்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் தனியார் பள்ளிகள் நாளை தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. உள்ளூர் விடுமுறை விடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இருவருக்கு மட்டுமே உள்ளதாகவும்,பேரிடர் காலங்கள், ஊர் திருவிழாக்கள் போன்றவற்றை முன்னிட்டு இந்த உள்ளூர் விடுமுறைகள் விடப்படுவது வழக்கம் என்றும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் தனியார் பள்ளிகளின் சங்கங்கள் தாங்களாகவே பள்ளிகளுக்கு விடுமுறை விட்டுக்கொள்வது சட்ட விதிமுறையை மீறும் செயலாகும், நாளை தனியார் பள்ளிகள் தாங்களாகவே விடுமுறை விட்டுக்கொண்டால் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சட்டவிதிமுறைப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

    • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு.
    • தனியார் பள்ளிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி தொடர் போராட்டம் நடத்த முடிவு.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற போராட்டம் இன்று கலவரமாக மாறியது.

    அந்த தனியார் பள்ளிக்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடினார்கள். பள்ளியின் நுழைவு வாயில் கேட்டை உடைத்த அவர்கள் அங்கிருந்த நாற்காலிகளை தூக்கி வந்து சாலையில் போட்டு தீவைத்து எரித்தனர்.

    மேலும் பள்ளி வளாகத்தில் இருந்த பஸ்களுக்கு தீ வைத்தனர். அந்த பள்ளியில் படித்து வரும் மாணவ,மாணவிகளின் சான்றிதழ்கள் தீயில் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகின.

    கள்ளக்குறிச்சி கலவரத்தால் பாதிக்கப்பட்ட தனியார் பள்ளியை உடனடியாக திறக்க வாய்ப்பில்லை என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

    இந்த போராட்டம் காரணமாக அந்த பள்ளியில் படித்து வரும் ஏறக்குறைய 4,000 மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் குறிப்பிட்டுள்ளது.

    இந்த நிலையில் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி சூறையாடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் நாளை முதல் தனியார் பள்ளிகள் இயங்காது என்று, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேசன் மேல் நிலைப் பள்ளிகள் சங்க தலைவர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.

    தனியார் பள்ளி மீதான தாக்குதலை கண்டித்து நாளை காலை தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், ஆசிரியர்கள், நிர்வாகிகள், கருப்பு பேட்ச் அணிந்து எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்த உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    பாதிக்கப்பட்ட தனியார் பள்ளிக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், மருத்துவமனைக்கு அளிக்கப்படுவதைப் போன்று தனியார் பள்ளிகளுக்கும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து தமிழக அரசு 2 நாட்களுக்குள் உரிய முடிவை அறிவிக்கா விட்டால் தனியார் பள்ளிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தில் சிபிஎஸ்சி கல்வி முறையில் இயங்கும் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் உள்ள 15 ஆயிரம் தனியார் பள்ளிகள் நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளால் மாணவ மாணவிகளின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

    இதனால் பள்ளிக்கல்வித்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • பிளஸ்-1 தேர்வு முடிவுகள் கடலூர் மாவட்டத்தில் 88.74 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    கடலூர்:

    கடலுார் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வினை105 அரசுப் பள்ளிகள், 11 அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், 29 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 100 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட மொத்தம் 245 பள்ளிகளிலிருந்து 15,834 மாணவர்கள், 15,740 மாணவிகள் உள்பட மொத்தம் 31574 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். இவர்களில் 13,146 மாணவர்களும், 14,874 மாணவிகளும் ஆக மொத்தம் 28,020 மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடலூர் மாவட்டத்தின் தேர்ச்சி சதவிகிதம் மாணவர்களுக்கு 83.02 சதவீதமும், மாணவிகளுக்கு 94.50 சதவீதமும் மொத்தத்தில் 88.74 சததவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர் கடலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகள் 82.84 சதவீதம் தேர்ச்சியும், அரசு உதவி பெறும் பள்ளிகள் 89.05 சதவீதமும், தேர்ச்சி பெற்றுள்ளன. மாநில அளவில் கடந்த ஆண்டில் (மார்ச் 2020ல்) கடை நிலையிலிருந்து உயர்வு பெற்று இந்த ஆண்டில் 22-வது நிலையை அடைந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் 72 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

    தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாரால் பொன்னேரி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
    பொன்னேரி:

    பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை விட மாணவர்களின் பெற்றோரிடம் 4 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் ஏழை மாணவர்களுக்கு அரசு உத்தரவுப்படி 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை எனவும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தன.

    இதையடுத்து தமிழ்நாடு மெட்ரிக் பள்ளித்துறை ஆய்வாளர் அருள்செல்வம், உதவி ஆய்வாளர் பல்லவ செல்வம் உள்ளிட்ட அதிகாரிகள் பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் அரசு விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து சென்றனர். இது குறித்து மாணவர்களின் பெற்றோர் கூறும் போது, ‘பல்வேறு தனியார் பள்ளிகளில் கட்டணக் கொள்ளை நடைபெற்று வருகிறது.

    கண் துடைப்புக்காக அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வதோடு தங்கள் கடமை முடிந்துவிட்டதாக கருதி கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.

    இனி வரும் காலங்களில் ஏழை-நடுத்தர மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு விதிமுறைகளை பின்பற்றாத தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிககை எடுக்க வேண்டும்’ என்றனர்.
    ×